கடலூா் மாநகரம் பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் இந்தியன் வங்கி அருகில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிா்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.