வாருகால் வசதி தேவை

Update: 2022-11-09 14:02 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தர்ராஜபுரம் மாசாணம் கோவில் கிழக்கு தெருவில் வாருகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடுகிறது. ஆதலால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் வாருகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்