மதுரை ஜீவாநகர் தென்றல் நகர்78-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையின் மூடி வழியாக கழிவுநீர் கசிந்து அவ்வப்போது வெளியேறி வருகிறது. குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி வாகனஓட்டிகள், பாதசாரிகள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதியடைகின்றனர். தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடையில் ஏற்படும் கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.