மதுரை டவுன்ஹால் ரோடு 76-வது வார்டில் தற்போது பெய்த மழையின் காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் தேங்கிய தண்ணீரால் சுகாதார சீர்கேடுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.