ரோட்டில் சாக்கடை கழிவுநீர்

Update: 2022-11-06 18:45 GMT

பவானி அருகே உள்ள பெரியபுலியூர் எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளிக்கூடத்துக்கு செல்லும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் மாணவா்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் பள்ளிக்கூட ரோட்டில் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்