பயனற்ற சுகாதார வளாகம்

Update: 2022-11-06 13:28 GMT
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி செல்வநகரில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சுகாதார வளாகத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பெண்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்