விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நூர்சாகிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த வழியாக போக்குவரத்து தடைபட்டு மாற்றுப்பாதையில் பலகிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.