தெருக்களில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-06 12:09 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் பகுதியில் கூட்டுறவு நகர், மேலையூர் ஊராட்சி கன்னி கோயில் தெரு, மணல்மேடு கடைவீதி ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் வடிய வழியின்றி தெருக்களில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்