தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-06 18:45 GMT

அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையம் ஜி.எஸ்.காலனியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமை அடையவில்லை. இதன்காரணமாக சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் பணியை முழுமையாக முடிப்பதுடன், கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்