மழை நீர் வடிகால் அமைக்காமல் புறக்கணிப்பு

Update: 2022-11-03 05:55 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகில் இருக்கும் காவங்கரை என்னும் பகுதியில் வசிக்கின்றோம். மழையின் காரணமாக எங்கள் பாகுதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீட்டுற்குள் மழைநீர் புகுந்ததால் விஷ பூச்சுகள் வருகின்றன. மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு இருந்த ஒரு மழைநீர் கால்வாயையும் அடைத்து விட்டனர் இதனால் தண்ணீர் வெளியே செல்வதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எங்களைப் போல் இங்கு பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வசிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


மேலும் செய்திகள்