திறந்தநிலையில் பாதாள சாக்கடை

Update: 2022-11-02 13:40 GMT

விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பெரியாண்டவர் கோவில் எதிரில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை திறந்த நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாடும் அத்தியாவசிய சாலை என்பதால் வாகனஓட்டிகள், பாதசாரிகள் எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடையை மூட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்