நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2022-11-02 12:40 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வயலப்பாடி ஊராட்சி, வீரமநல்லூர் கிராமம், அம்பேத்கர் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நோய் தொற்றை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையின் குறுக்கே கழிவுநீர் தேங்கி நிற்பதினால் அதில் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்