வடிகால் வசதி அமைக்க கோரிக்கை

Update: 2022-10-30 16:27 GMT

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலைப்பட்டி பகுதியில் போதிய மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து விடுவதால் கொசு உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் போதிய மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்