சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தேனாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் சமீபகாலமாக இறைச்சி கழிவுகள் முதலானவை அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி ஆறானது மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.