ராமநாதபுரம் நகரில் ரெயில்வே பீடர் சாலை, அண்ணாநகரை இணைக்கும் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீரானது சிலநாட்களாக வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தேங்கிய கழிவுநீரால் சிரமப்படுகிறார்கள். மேலும் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும.