சாலையில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-10-26 15:19 GMT
திருச்செந்தூர் வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி சந்திக்கும் சாலையில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மீது கழிவுநீர் தெறிக்கின்றன. எனவே, அங்கு சுகாதாரக்கேட்டை போக்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்