கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படுமா?

Update: 2022-10-26 12:46 GMT
திருச்சி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட உய்யகொண்டான் திருமலை சண்முகாநகர், 2-வது கிராஸ் சாலையோரம் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் தற்போது பெய்த மழைநீர் கழிவுநீருடன் கலந்து ஓடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்