மதுரை மாநகராட்சி 73-வது வார்டு காந்திஜி தெருவில் உள்ள சாலைகளில் குப்பைகள் அள்ளாமலும் கழிவுநீர் தேங்கியும் உள்ளது. தேங்கிய கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இந்த பகுதிகளில் கொசுமருந்து அடிக்கவும் சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.