மதுரை நகர் வடக்கு தெரு 25-வது வார்டு மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின்ரோடு, ஜீவா தெரு, வ.உ.சி. முதல்தெரு ஆகிய தெருக்களில் பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் நடக்க, வாகனங்களில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் சாலையில் தேங்காதவாறு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.