நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-19 16:27 GMT

தேவதானப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியான தூய்மை பணியாளர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீருடன், மழைநீர் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாக மையமாக மாறியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீரை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்