நடவடிக்கை அவசியம்

Update: 2022-10-19 08:50 GMT


கணபதிபுரத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஒரு பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்கிறார்கள். இந்த பாதையில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்