வடிகால் வசதி வேண்டும்

Update: 2022-10-16 11:37 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் முதல்நிலை பேரூராட்சி 13-வது வார்டு பெருமாள் கோவில் சன்னதி தெருவில் கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

.


மேலும் செய்திகள்