தேனி அல்லிநகரம் நகராட்சி 4-வது வார்டு இந்திரா நகரில் சாக்கடை கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் கழிவுநீர் தெருவில் தேங்குகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சாக்கடை கால்வாய் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.