திறக்கப்படாத கழிப்பறை

Update: 2022-10-09 17:37 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா சார்வாய் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கழிவறை தற்போது வரைக்கும் திறக்கப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிப்பறையை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்