தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-09 14:49 GMT
கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுந்தராம்பாள் நகரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கழிவுநீர்வாய்க்கால் அமைக்கப்பட்டது. ஆனால் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து கழிவுநீர் வெளியேறும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. அதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்