சுகாதார சீர்கேடு

Update: 2022-10-09 13:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரிலிருந்து கொசு அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதன் காரணமாக இந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்