ஏரியில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-10-05 17:32 GMT
திட்டக்குடி அருகே வெலிங்டன் ஏரியில் அதிக அளவில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரியை துர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்