சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மேலப்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் குப்பை தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரானது வெளியேறி சாலையில் தேங்குகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.