புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-10-05 15:30 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் 5-வது வார்டு பிள்ளையார் கோவில் தெரு அரசு மாணவர்கள் விடுதி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே உள்ள வாறுகால் கடந்த சில ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் திருக்குமரன் அனுப்பிய பதிவு பிரசுரமானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வாறுகால் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்