சுகாதார சீர்கேடு

Update: 2022-10-05 12:43 GMT

நாகை பெரிய கடைதெரு பகுதியில் ஆங்காங்கே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இதனால் கடைதெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கடை வீதிக்கு வருபவர்கள் மூக்கை மூடியபடி வந்து செல்கின்றனர். மேலும், வெளியேறும் கழிவுநீரினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய கடைதெரு பகுதியில் கழிவுநீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்