சுகாதார சீர்கேடு

Update: 2022-10-03 16:52 GMT

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முழுக்கோடு ஊராட்சியில் புண்ணியம் பகுதியில் சாலையோரம் வடிகால் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. வடிகால் ஓடையை முறையாக தூர்வாரி பராமரிக்காததால் கழிவுகளால் தண்ணீர் வடிந்தோட வழியில்லாம் சாலையில் நடைபாதையில் பாய்கிறது. இதனால், அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வடிகால் ஓடையை தூர்வாரி தண்ணீர் வடிந்ேதாட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அனில்குமார். புண்ணியம்.

மேலும் செய்திகள்