சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-28 13:45 GMT

திருவாரூர் நகராட்சி புறநகர் பகுதியான ராமநாதன் நகரில் தைத்தெரு, கார்த்திகைத்தெரு ஆகிய தெருக்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அந்த தெருக்களில் கழிவுநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்