குளம்போல் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-09-26 16:52 GMT

வடமதுரையை அடுத்த அய்யலூரில் வண்டிக்கருப்பணசாமி கோவில் அருகில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கோவில் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாய் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்