சாக்கடை கால்வாய் மூடப்படுமா?

Update: 2022-09-26 14:14 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் கீரனூர் செல்லும் சாலையோரத்தில் சாக்கடை கால்வாய் ஒன்று மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாய் மேல் பகுதியில் தளம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்