குளம் போல் தேங்கியுள்ள மழைநீர்

Update: 2022-09-26 12:42 GMT

நாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவின் அலங்கார வாசல் அருகே சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்