கழிவுநீர் செல்ல வடிகால் வேண்டும்

Update: 2022-09-24 15:35 GMT
அரியலூர் மாவட்டம், திருப்பெயர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து நடுநிலை பள்ளி வரை சாலையின் இருபுறங்களில் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அங்குள்ள கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், வெற்றியூர்.

மேலும் செய்திகள்