தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-24 14:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சி வார்டு எண் 5 -ல் பழைய கடைவீதி தெருவில் சுமார் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தெருவின் மையப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்