சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-24 11:10 GMT

நாமக்கல் பஸ் நிலையம் அருகே கந்து முத்துசாமி தெரு உள்ளது. இந்த தெருவில் செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்