தோண்டப்பட்ட சாக்கடையால் ஆபத்து

Update: 2022-09-23 17:33 GMT

புதுச்சேரி லெனின் வீதியில் தோண்டப்பட்ட சாக்கடை கால்வாய் மூடப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதோடு, குப்பைகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் சிறுவர்களும் சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாக்கடை கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்