கழிவறை தொட்டி சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-21 16:01 GMT

லெட்சுமாங்குடி-மரக்கடை சாலையில், தீயணைப்பு நிலையம் அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கழிவறை ஒன்று கட்டப்பட்டது. இந்தக் கழிவறையை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வாரங்களாக இந்த கழிவறையின் கழிவுநீர் தொட்டி சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கழிவறையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கடை சாலையில் உள்ள கழிவறை கழிவு நீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்