மதுரை கிழக்கு தொகுதி 4-வது வார்டு ஆனையூர் கோசாகுளம் பெரியார் நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.