தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

Update: 2022-07-13 16:16 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் அந்த பள்ளியின் பின்புறத்தில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலில் கழிவுப்பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்