கழிவுநீர் வடிகால் அமைக்க கோரிக்கை

Update: 2022-09-16 14:39 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முகமதுபட்டினம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் பாதி தெருக்களில் கழவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து ஓடுவதால் தூர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. ஏற்கனவே தெருக்களில் போடப்பட்ட வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியும் வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் வடிகால் வசதி இல்லாத தெருக்களில் புதிதாக கழிவுநீர் வடிகால் அமைக்கவும், ஏற்கனவே உள்ள வடிகால்களில் அடைப்புகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்