ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் உள்ள தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.