விருதுநகர் மாவட்டம் கடம்பன்குளம் ஊராட்சிக்குட்பட்ட பசும்பொன்புரம் கிராமத்தில் 3-வது வார்டு நடுத்தெருவில் கழிவுநீர் செல்ல வாருகால் இல்லாத காரணத்தால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், தெருவில் நடந்து செல்பவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கழிவுநீர் வாருகால் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.