தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-09-14 13:28 GMT

 பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமம், இந்திரா நகர் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் சாலைகளில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்