கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-09-14 12:36 GMT
தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் தியாகை கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்