பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி 1-வது வார்டு நேசமணி தெருவில் வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அவற்றில் கொசுப்புழுக்கள் உருவாவதால் இரவில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.