குரும்பூர் பஜாரில் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. தற்போது, இந்த பணி கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த குழியில் சாக்கடை நீர் தேங்கி கிடக்கிறது. சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.