மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரிவர தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உருவாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுக்களும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.